Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

வெடி-யில் இரட்டை வேடத்தில் விக்ரம்!

Written By Raveendran on Wednesday, July 28, 2010 | Wednesday, July 28, 2010

விக்ரம் படம், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட். மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரமை விக்ரம் கே. குமார்தான் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அது கைகூடாமல் போக விக்ரம் கே.குமா‌ரின் இடம் பூபதி பாண்டியனுக்கு கிடைத்தது. தனது படத்துக்கு வெடி என்று பெயர் வைத்துள்ளார் பூபதி பாண்டியன் என்பதும், இலியானா வெடியின் ஹீரோயின் என்பதும் தெ‌ரிந்த விஷயங்கள். இந்தப் படத்தில் விக்ரம் போலீஸ் அதிகா‌ரியாக நடிக்கிறார்.

ஏற்கனவே விக்ரம் நடித்த போலீஸ் கதையான சாமி கண்டபடி ஓடியதால் வெடி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். இதில் இன்னொரு சுவாரஸியம், போலீஸாக நடிக்கும் அதேநேரம் போலீசுக்கு குடைச்சல் கொடுக்கும் ரவுடியாகவும் இதில் வருகிறாராம் விக்ரம். ஆம், விக்ரமுக்கு இதில் இரட்டை வேடமாம்.
Wednesday, July 28, 2010 | 0 comments

விஜய்யின் மெகா பட்ஜெட் படம்!

விஜய் நடிக்க விக்ரம் கே.குமார் இயக்கும் படம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை தயா‌ரிப்பவர் பல ஹிட் படங்களை தந்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம். சில காலம் படத்தயா‌ரிப்பிலிருந்து விலகியிருந்த இவர் தனது ‌‌ரீஎ‌ண்ட்‌ரியை பிரமாண்டமாக அமைக்க அத்தனை ‌ரிஸ்க்கையும் எடுத்து வருகிறார்.

விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடித்தப் படங்களிலேயே மிக அதிகம் என்கிறார்கள் ரத்னத்தின் அலுவலகத்தில். படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நாற்பது கோடியாம்.

இத்தனை காஸ்ட்லி படத்தில் விஜய் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் பிலிம்சின் வேலாயுதம் படத்துக்குப் பிறகு இந்த மெகா புராஜெக்ட் தொடங்கப்படும் என்கிறார்கள். விஜய்யின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Wednesday, July 28, 2010 | 0 comments

ரோபோ விழாவில் கமல்!

வரும் 31 ஆம் தேதி எந்திரன் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர். பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ஷங்கர், ர‌ஜினி, ஐஸ்வர்யாராய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படத்தில் பணிபு‌ரிந்த அனைவரும் கலந்து கொள்கிறார்கள். பிரமாதமான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (சன் டிவியில் ஆறு மணி நேரத்துக்கு ஒளிபரப்ப வேண்டுமே).

இந்த விழாவில் ஜுனியர் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆரும் - அதாங்க சிலம்பரசன் - ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறாராம். எந்திரன் படப் பாடலாக அது இருக்கும் என்கிறார்கள். இந்த ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் இன்னொரு தமிழக விஐபி கமல்ஹாசன். எந்திரன் கதை முதலில் ரோபோ என்ற பெய‌ரில் கமலுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்த
Wednesday, July 28, 2010 | 0 comments

திருநங்கை வேடத்தில் விஷால்

Written By Raveendran on Tuesday, July 20, 2010 | Tuesday, July 20, 2010


பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். திருநங்கையை சினிமா வட்டாரத்தில் அவன் என பட்டப்பெயரிட்டு அழைப்பதுண்டு. விஷாலின் திருநங்கை வேடம் பற்றிய தகவல் வெளியாகி விடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது வெளியே கசிந்து விட்டது. முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலா படம் என்பதால் இந்த கேரக்டரை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதாநாயகியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பாலா படம்ல திருநங்கை என்ன? தெருநங்கை கூட நடிப்பாங்க.....
Tuesday, July 20, 2010 | 0 comments

அஜித்தின் மங்காத்தாவுக்கு எதிர்ப்பு

அஜித்தின் 50-வது படத்துக்கு மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் பட நிறுவனம் தயாரிக்கிறது. நீதுசந்திரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் யாவரும் நலம் என்ற படத்தில் மாதவனுடன் நடித்தவர். அஜித் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது அதை தள்ளி வைத்து விட்டு பட வேலைகளில் இறங்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் அஜித் படத்துக்கு மங்காத்தா பெயர் வைக்க திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தயாரிப்பாளர் மனோ அக்கினேஷி இந்த தலைப்புக்கு சொந்தம் கொண்டாடுகிறார். இவர் ஏற்கனவே குறும்பு என்ற படத்தை எடுத்தவர். தற்போது ஸ்ரீகாந்த் நடிக்கும் துரோகி படத்தை தயாரித்து வருகிறார். நிறைய டி.வி. தொடர்களும் தயாரித்துள்ளார். அஜித் படத்துக்கு மங்காத்தா பெயர் வைத்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். ஆனாலும் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. மங்காத்தா தலைப்பு என்னுடையது. வரும் காலங்களில் தயாரிப்பதற்காக சில பட தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். அதில் மங்காத்தா தலைப்பும் ஒன்று. இதே தலைப்பில் படம் எடுக்க நான் முடிவு செய்துள்ளேன், என்று கூறினார். மங்காத்தா போனா என்ன? மாரியாத்தா இருக்குல்ல....
Tuesday, July 20, 2010 | 0 comments

தலைப்பை தவறவிட்ட கமல்

சில ஆண்டுகளுக்கு முன் ‘நரன்’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார் கமல்ஹாசன். தான் இயக்கி, நடிக்கும் படத்துக்காக இந்த தலைப்பை வைத்திருந்தார். இப்போது இந்த தலைப்பில் நடன இயக்குனர் அக்னீஸ்வரன், பூர்ணா நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஆதி. ‘‘நரன் தலைப்பை பதிவு செய்திருந்தோம். ஆனால் அதை புதுப்பிக்க மறந்துவிட்டோம். இதனால் தலைப்பை தவறவிட்டோம்’ என கமல் பட வட்டாரம் தெரிவித்துள்ளது.
Tuesday, July 20, 2010 | 0 comments

இலங்கை நட்சத்திர ஓட்டலில் டோனி - அசின் சந்திப்பு

இலங்கையில் நடிகை அசின் தங்கியிருந்த ஓட்டலில் இந்திய கிரிக்கெட் அணி கேப¢டன் டோனியும் தங்கியிருந்தார். அங்கு டோனியை சந்தித்து பேசினார் அசின். விளம்பர படம் ஒன்றில் டோனியுடன் சேர்ந்து நடித்தார் அசின். அப்போது இருவருக்கும் நட்பு மலர்ந்தது. மும்பையில் உள்ள அசின் வீட்டுக்கு டோனி அடிக்கடி சென்று வந்தார். இதற்கிடையே டோனிக்கு அவரது பள்ளி தோழி சாக்ஷியுடன் திடீர் திருமணம் நடந்தது. இதற்கு அசினுடன் டோனிக்கு ஏற்பட்ட நெருக்கமும் காரணம் என கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது, ‘டோனி எனது நண்பர்தான். அவருடன் காதல் இல்லை. அவர் சாக்ஷியை காதலிப்பது ஏற்கனவே எனக்கு தெரியும்’ என்றார்.

சமீபத்தில் ‘ரெடி’ இந்தி படத்தின் ஷூட்டிங்குக்காக அசின் இலங்கை சென்றார். கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இந்தியா& இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியும் கடந்த வாரம் இலங்கை சென்றது. அசின் தங்கியிருந்த அதே நட்சத்திர ஓட்டலில் டோனியும் தங்கியுள்ளார். அப்போது இருவரும் சந்தித்து பேசினர். இதுபற்றி அசின் கூறியதாவது: இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தேன். நான் தங்கியிருந்த ஓட்டலில் டோனியும் தங்கியிருந்தார்.

நாங்கள் நண்பர்கள். அவரது திருமணத்துக்கு போக முடியவில்லை. அதனால் நேரில் சந்தித்து வாழ்த்தலாம் என இருந்தேன். அவரே இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன். ஓட்டலில் அவர் மட்டுமல்ல, மொத்த இந்திய கிரிக்கெட் அணியும் தங்கியிருந்தது. ‘ரெடி’ பட ஷூட்டிங் இலங்கையில் முடிந்து விட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. விஜய்யுடன் நடிக்கும், ‘காவல் காதல்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்க அடுத்த மாதம் சென்னை வருவேன். இவ்வாறு அசின் கூறினார்.
Tuesday, July 20, 2010 | 0 comments

டீலா நோ டீலாவுக்கு வருவாரா நயன்தாரா?

Written By Raveendran on Sunday, July 18, 2010 | Sunday, July 18, 2010

சன் டிவியின் கேம் ஷோக்களிலேயே பிரம்மாண்டமானதாக பேசப்பட்ட டீலா நோ டீலா, டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டவில்லையாம். இதனால் அப்செட் ஆகியுள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு சினிமா நடிகைகள் மூலம் புது மெருகூட்ட களம் இறங்கியுள்ளனர். நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி. இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம்.
 டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம். நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம். இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
 இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம். இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயன்தாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம். சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயன்தாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம். இந்த டீல் ஓ.கேவா நயன்...?

Sunday, July 18, 2010 | 0 comments

‘தன்னை விளம்பரப்படுத்துவதில் கில்லாடி’ அசின் மீது டைரக்டர் தாக்கு

நடிகை அசின் சமீபகாலமாகவே பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார். இலங்கைக்கு சென்ற விஷயம் விவகாரமாகி, தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அசினைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார் டைரக்டர் பிரியதர்ஷன். ‘லேசா லேசா’ படம் மூலம் த்ரிஷாவை தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டைரக்டர் ப்ரியதர்ஷன். அவர் இயக்கிய ‘காஞ்சிவரம்’ படம் தேசிய விருது பெற்றது. தற்போது, ‘கட்டா மிட்டா’ என்ற இந்திப் படத்தை அவர் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு த்ரிஷாவை ஹீரோயினாக அறிமுகம் செய்துள்ளார்.

இந்தப் படம் பற்றி நேற்று அவர் அளித்த பேட்டியின்போது அசினை வம்புக்கு இழுத்து விமர்சித்தார். அதன் விவரம் வருமாறு: எனது மிகச் சிறந்த படமாக ‘கட்டா மிட்டா’ படத்தை கருதுகிறேன். 1989ல் மோகன்லால் & ஷோபனா நடிக்க, நான் இயக்கிய ‘வெல்லானகுல்டே நாடு’ என்ற நகைச்சுவை கதையின் கருவை கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கும் அக்ஷய்குமார்தான், படத்தின் தயாரிப்பாளர். தனக்கு ஜோடியாக தென்னிந்திய நடிகையான த்ரிஷாவை அவரே விரும்பி தேர்வு செய்தார்.

‘இந்தி படத்தில் அசின் அறிமுகமானபோது அவருக்கு மீடியாவும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் கொடுத்தது. த்ரிஷாவுக்கு அத்தகைய விளம்பரம் கிடைக்காதது ஏன்?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். முன்னணி நடிகராக திகழும் ஆமிர்கானுக்குதான் அசின் கால்ஷீட் கொடுத்தார். அசின் ஒரு விளம்பரப் பிரியை. அவரது கவனம் முழுவதும் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதில் இருந்தது. அதற்காக ஆமீர்கானுடன் ஜோடி சேர்ந்து எல்லா விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். த்ரிஷா என்னுடைய வளர்ப்பு. அவருக்கு அப்படியொரு விளம்பரம் கிடைக்கவில்லை. 
‘கட்டா மிட்டா’ வெளியாகும் இந்தநேரத்தில் இப்படத்தை விளம்பரப்படுத்த அக்ஷய்குமார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரும் கலந்து கொண்டிருக்க வேண்டும். மும்பையில் தங்கி இருக்க வேண்டிய இந்தநேரத்தில் அவர் தமிழ்படம் ஒன்றுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டார். பாலிவுட் படங்களை பொறுத்தவரை மார்க்கெட் பிடிப்பது என்பது விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பதிலுமே இருக்கிறது.
இவ்வாறு ப்ரியதர்ஷன் கூறினார்.


Sunday, July 18, 2010 | 0 comments

கவர்ச்சியை நம்பி பயன் எதுவும் இல்லை : அனுஷ்கா

கவர்ச்சியை நம்பி பயன் எதுவும் இல்லை. சினிமாவில் நிலைக்க நடிப்பு அவசியம் என்கிறார் அனுஷ்கா. இது பற்றி அவர் கூறியது: ‘வேதம்’ தெலுங்கு படத்தால் நல்ல பெயர் கிடைத்தது. அதில் பாலியல் தொழிலாளியாக கவர்ச்சியாக நடித்தீர்களே எனக் கேட்கிறார்கள். எனது மனதுக்கு எது நல்லது என படுகிறதோ அதை செய்கிறேன். வெறும் கவர்ச்சியாக நடித்திருந்தால் எனக்கு பெயர் கிடைத்திருக்காது. அதில் நடிப்பை வெளிப்படுத்தவும் வாய்ப்பு இருந்தது. அதனால்தான் என் கேரக்டர் பேசப்பட்டது. வெறும் கவர்ச்சியை நம்பினால் சினிமாவில் நிலைக்க முடியாது. அதை நன்றாக புரிந்து கொண்டேன்.
அதே நேரம் ஒரு பாடலுக்கு ஆடுவது தவறில்லை. அதில் கவர்ச்சி அதிகம் காட்டாமல்தான் நடனம் ஆடுகிறேன். ஐஸ்வர்யா ராய் எத்தனையோ பாடல்களில் நடித்திருந்தாலும் ‘கஜ்ராரே’ என்ற பாடல்தான் இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கிறது. அது அவர் நடித்த படத்தில் இடம்பெறவில்லை. ‘பன்ட்டி அவுர் பப்லி’யில் ஒரு பாடலுக்கு அவர் ஆடினார். அதில் இடம் பெற்ற பாடல் அது. எனவே ஒரு பாடலுக்கு ஆடுவதை கேவலமாக நினைக்கக் கூடாது.

Sunday, July 18, 2010 | 0 comments

சிம்பு படத்திலிருந்து மோகன்பாபு மகன் விலகல்

தெலுங்கில் வெளியான ‘வேதம்’ பட ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்துக்கு ‘வானம்’ என தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் இயக்கிய கிரீஷ், தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த வேடத்தில் சிம்பு நடிக்கிறார். மோகன்பாபுவின் மகன் மனோஜ் நடித்த வேடத்துக்கு அவரையே தேர்வு செய்திருந்தனர். சிம்பு தனது நண்பர் என்பதால் இதில் நடிக்க மனோஜ் சம்மதித்திருந்தார். திடீரென இப்போது படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி மனோஜ் கூறும்போது, ‘‘ஒரு விபத்தில் தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க டாக¢டர்கள் கூறியுள்ளனர். அதனால் ‘வானம்’ படத்தில் நடிக்கவில்லை’’ என்றார்.

Sunday, July 18, 2010 | 0 comments

ஒத்த பாட்டுக்கு ஆடுவதில் தப்பில்லை - அனுஷ்கா


ஒரு பாட்டுக்கு ஆடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அனுஷ்கா கூறினார். சிம்பு நடிக்கும், வானம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் அனுஷ்கா. அவருக்கு சம்பளமாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்கள். இதுபற்றி அனுஷ்கா கூறியது: ஒரு பாட்டுக்கு ஏன் ஆடுகிறாய்? கதாநாயகியாகவே தொடர வேண்டியதுதானே என்கிறார்கள் தோழிகள். இதில் என்ன தவறு இருக்கிறது? உலக அழகி ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஒரு பாட்டுக்கு ஆடிய, கஜ்ராரே என்ற இந்தி பாடல் இன்னும் ரசிகர்களின் மனதில் நிற்கிறது. 
ஒரு பாட்டுக்கு ஆடுவது தான் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது மனநிலைக்கு எது ஒத்துவருகிறதோ அதை செய்கிறேன். எனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அந்த கேரக்டர்களில் நடிக்கிறேன். ஆடுகிறேன். இதில் மற்றவர்களின் கருத்துகள் பற்றி கவலை இல்லை என்று கூறினார் அனுஷ்கா. உங்க தில்லும் ரொம்ப ஒசரம் தான்....

Sunday, July 18, 2010 | 0 comments

நல்ல அம்மாவான சுஹாசினி

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை திரைக்குப் பின்னால்தான் இருக்கிறார் சுஹாசினி. திரையில் அவர் தலைகாட்டி வருடங்களாகிறது. ஆனால் மலையாளத்திலும், கன்னடத்திலும் நல்ல அம்மா வேடத்திற்கு சுஹாசினிதான் முதல் சாய்ஸ். மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக சமீபத்தில் நடித்தார் சுஹாசினி. இவர்களின் மகனாக சீனிவாசனின் மகனே நடித்திருந்தார். இதேபோல் அம்மா பாசத்தை சொல்லும் மகேந்திர குமார் இயக்கிய கன்னடப் படத்தில் கதாநாயகி அர்ச்சனாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சுஹாசினி. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை தமிழில் உள்ளமெல்லாம் தாலாட்டுதே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். சுஹாசினியை திரையில் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படும் ரசிகர்களுக்காக உள்ளமெல்லாம் தாலாட்டுதே விரைவில் வெளியாக உள்ளது. தமிழர்களையும் தாலாட்ட வாங்கம்மா....

Sunday, July 18, 2010 | 0 comments

புது படங்ளை ஒப்புக்கொள்ள மாட்டேன் - அஞ்சலி


ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது என்கிறார் அஞ்சலி. இது பற்றி அவர் கூறியது: தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகிழ்ச்சி, மகாராஜா, கருங்காலி, மலையாளத்தில் ஜெயசூர்யா ஜோடியாக ஒரு படம் உட்பட ஆறு படங்களில் நடிக்கிறேன். ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இது எனக்கு கஷ்டமாக உள்ளது. நடித்து வரும் படங்களில் பல, முன்பே ஒத்துக்கொண்டது.
 பல்வேறு கட்டத்தில் இந்த படங்களுக்காக கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த நேரத்தில் அந்த படங்கள் தொடங்கப்படவில்லை. முன்பு ஒப்புக்கொண்ட காரணத்துக்காகவே இதில் நடிக்கிறேன். கருங்காலி அந்த வகையில் முன்பே ஒப்புக்கொண்ட படம்தான். இனி புது படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்த படங்களை முடித்த பின்பே புது படத்தில் நடிப்பேன். சமுத்திரக்கனி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. அதனால் அதில் நடிப்பதில் பிரச்சினை வராது, என்று கூறினார். இனிப்ப தேடித்தானே ஈக்களும் வரும்...!

Sunday, July 18, 2010 | 0 comments

காதல் திருமணம் செய்ய மாட்டேன் - கார்த்தி

கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் நான் மகான் அல்ல சுசீந்திரன், இயக்குகிறார். ஞான வேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. இயக்குனர்கள் லிங்குசாமி, ஹரி, விஷ்ணுவர்த்தன், எழில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்தி பேசியது:- நான் மகான் அல்ல படம் சிறப்பாக வந்துள்ளது. பையா பட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். 

பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகுமிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழுக்காக வந்த என்னை பையாவில் அழகாக காட்டிய லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று பேசினார் கார்த்தி. ஏ பையா...இது பொய் தானே?

Sunday, July 18, 2010 | 0 comments

இசையமைப்பாளரை காதலிக்கவில்லை : மம்தா

Written By Raveendran on Saturday, July 10, 2010 | Saturday, July 10, 2010


சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்தவர் மம்தா. இவர் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவரை பாடகியாக அறிமுகப்படுத¢தியவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இருவரும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு பரவியது. பின் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இப்போது மீண்டும் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுபற்றி மம்தா கூறுகையில், தேவி ஸ்ரீபிரசாத் எனக்கு பாட வாய்ப்பு தந்தவர். அவரால்தான் பின்னணி பாடகி ஆனேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். 

அதனால் வெளி இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தோம். இதை வைத்து நாங்கள் காதலிப்பதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது. தொடர்ந்து தேவியின் பாடல்களை நான் பாடுவதாகவும் சொல்கிறார்கள். அதிலும் உண்மை இல்லை. இந்த பாடலுக்கு என் குரல் நன்றாக இருக்கும் என தேவி எண்ணினால் மட்டுமே வாய்ப்பு தருவார் என்றார். தேவி ஸ்ரீபிரசாத், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு, விக்ரம் நடிக்கும் ‘வெடி’, ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகியவற்றுக்கு இசை அமைக்கிறார்
Saturday, July 10, 2010 | 0 comments

சண்டை காட்சியில் நடிக்க மாதவனுக்கு தடை


சாக்லெட் பாய் இமேஜுடன் இருந்த மாதவன் ‘ரன், ‘தம்பி மூலம் ஆக்ஷன் ஹீரோ ஆனார். அதன்பின் தொடர்ச்சியாக 
ஆக்ஷன் படங்களில் நடித்தார். இந்தியில் நடித்த ‘தனு வெட்ஸ் மனு படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அவரது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர். அதை மீறி இன்னொரு இந்தி படத்திலும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தாராம். 

அப்போது அவருக்கு காலில் வலி அதிகரித்தது. இதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க டாக்டர்கள் அவருக்கு தடை போட்டுள்ளனர். லிங்குசாமி இயக்கும் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்க அவருக்கு அழைப்பு சென்றது. ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் அப்படத்தில் நடிக்க 
இயலாததை தெரிவித்திருக்கிறார் மாதவன்.
Saturday, July 10, 2010 | 0 comments

பேய் இருப்பது உண்மைதான் - சாயாசிங்

தமிழகமெங்கும் இன்று வெளியான ஆனந்தபுரத்து வீடு என்ற பேய் படத்தில் நடித்துள்ளார் சாயாசிங். இதில் நாயகன் நந்தா. பிரபலமான மர்மதேசம் டி.வி. தொடரை இயக்கிய நாகா இயக்கியுள்ளார். சாயாசிங் ஏற்கனவே திருடா திருடி, வல்லமை தாராயோ படங்களில் நடித்துள்ளார். ஆனந்தபுரத்து வீடு பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சாயாசிங் சொல்கிறார். இந்த படத்தின் கதை பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். இயக்குனர் நாகா திறமையானவர். புத்தி கூர்மை உள்ளவர். டி.வி. தொடர்கள் எடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். நந்தா தமிழ் பேசி நடிக்க எனக்கு உதவினார். இப்படம் த்ரில்லர் கதை. படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கும். எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. உலகில் நல்லவைகளும், தீய சக்திகளும் இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று எப்படி நம்புகிறேனோ அதுபோல் பேய்கள் உண்டு என்பதையும் நம்புகிறேன், என்று கூறினார். பேய் படத்தில் நடித்த அனுபவமா?

Saturday, July 10, 2010 | 0 comments

விஜய் நஷ்டஈடு பிரச்சினை; அவசர செயற்குழு கூட்டம்


விஜய் படங்களில் நஷ்டம் ஏற்பட்டதால் தங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் வற்புறுத்தினர். இது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதற்கு முன் ரஜினி, மணிரத்னம் படங்கள் நஷ்டமான போது அவர்கள் நஷ்டஈடு அளித்ததாகவும் அது போல் நஷ்டங்களை விஜய் தரப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் தியேட்டர்காரர்கள் கூறினர். இன்னும் இப்பிரச்சினையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நஷ்டஈடு பிரச்சினை குறித்து ஆலோசிக்க வருகிற 13-ந்தேதி சென்னையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

Saturday, July 10, 2010 | 0 comments

த்ரிஷாவிற்கு போட்டி அம்மா?

 'சமீபத்தில் 'மன்மதன் அம்பு' படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல் அவர் நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் த்ரிஷாவின் அம்மா நடிக்கிறார். இதுபற்றி பட குழுவினரிடம் கேட்ட போது, அவர் இப்போது த்ரிஷாவுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பில்தான் இருக்கிறார். ஜாலிக்காக கவுரவத் தோற்றத்தில் நடிக்க கேட்டிருக்கிறோம். ஆனால், அவர் இன்னும் முடிவு சொல்லவில்லை என்கிறது பட வட்டாரம்.
Saturday, July 10, 2010 | 0 comments

கார்த்தியுடன் காதலா? : தமன்னா பரபரப்பு பேட்டி!


கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை என்றார் தமன்னா. பையா படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் தமன்னா. இதையடுத்து இப்போது மீண்டும் கார்த்தியுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் தன்னுடன் நடிக்க தமன்னா பெயரை கார்த்தி சிபாரிசு செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமன்னா அளித்த சிறப்பு பேட்டி: என்னுடன் நடிக்கும் கதாநாயகர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் நட்பாக பழகுவேன். கார்த்தியுடனும் அப்படித்தான் பழகினேன்.

அயன் படத்தில் நடித்தபோது சூர்யா, கார்த்தியை பற்றி நிறைய சொல்வார். என்னுடன் நடிப்பதைவிட கார்த்தியுடன் நடிக்கும்போது நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. காரணம், கார்த்தி கலகலப்பாக பேசக்கூடியவன் என்பார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை படப்பிடிப்பு தளத்தில் தெரிந்து கொண்டேன். ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி நட்பாக பேசிக்கொள்வது தவறா? எங்களை பற்றி நிறைய தகவல்கள் வருகிறது.

அதில் எதுவும் உண்மை இல்லை. கார்த்தியுடன் மீண்டும் இணைந்து நடிப்பது பற்றியும் கேட்கிறார்கள். இதற்கு முன் ஒரே கதாநாயகன், கதாநாயகி பல படங்களில் சேர்ந்து நடித்ததே இல்லையா? அப்படி பலர் இருக்கிறார்கள். அதனால் இதை பெரிதுபடுத்த தேவையில்லை. வெளியிடங்களுக்கு எங்கு சென்றாலும் அப்பா, அம்மாவுடன்தான் செல்வேன். எந்த வெளியிடத்திலும் என்னுடன் நடிக்கும் நடிகர்களையோ, பிற நடிகர்களையோ நான் சந்தித்ததே கிடையாது. அப்படி இருக்கும்போது இது போன்ற காதல் செய்திகளை கேட்டு சிரிப்புதான் வருகிறது. இப்போது கார்த்தியுடன் நடிக்கும் படம் தவிர, தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது முதல் வேலை, என்று கூறினார் தமன்னா. போதும்! 
Saturday, July 10, 2010 | 0 comments

கமலுடன் நடிக்க முடியாத கவலையில் த்ரிஷா!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் சங்கீதாதானாம். த்ரிஷா மாதவனுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். கமல் சங்கீதா ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கும் படத்தில் முக்கியப்பங்கு இருக்கிறதாம். கமல் படத்தில் நடிக்கும் ஆசை நிறைவேறினாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் த்ரிஷா. பாலுமகேந்திராவின் சதிலீலாவதி படம் போல் இந்தப்படமும் நகைச்சுவை வகையைச் சார்ந்ததாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.ஐயோ! பாவம் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே...
Saturday, July 10, 2010 | 0 comments

அப்பாவானார் ஜெயம் ரவி!

Written By Raveendran on Friday, July 2, 2010 | Friday, July 02, 2010

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு ஜூன்.29 ஆண் குழந்தை பிறந்தது. திரை நட்சத்திரங்களுக்கு இந்த மாதம், அதிர்ஷ்டமான மாதம் போலிருக்கிறது. நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்து நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரண்டு ஜோடிகளுக்கு இது இரண்டாவது குழந்தையாகும். இப்போது ஜெயம் ரவிக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஜெயம் ரவிக்கும், சென்னையை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் ஜூன், 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 நிறைமாத கர்ப்பமாக இருந்த ஆர்த்திக்கு ஜூன்.2 காலை பிரசவவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாலை 4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், அண்ணன் இயக்குனர் ஜெயம் ராஜா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அமீர் இயக்கும் ஆதிபகவான் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் ஜெயம் ரவி, குழந்தை பிறந்த தகவல் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை (ஜூலை 1) சென்னை திரும்புகிறார். இது 'திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் உதிக்கும்' மாதம்!


Friday, July 02, 2010 | 0 comments

ஆஸ்கர் விருது கமிட்டியில் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு!

உலக அளவில் தயாராகும் சினிமாக்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து ஆஸ்கர் விருது அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்டது. இதே போல் கேரளாவை சேர்ந்த ரசூல்பூக்குட்டி என்பவரும் ஆஸ்கர் விருது பெற்றார். இந்தியாவில் தயாரான ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இருவரும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் ஆஸ்கர் கமிட்டிக்கு வரும் படங்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு ஏ.ஆர்.ரகுமானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் இனி வரும் ஆண்டு முதல் ஆஸ்கருக்கு விண்ணப்பிக்கும் படங்களை மதிப்பீடு செய்யும் நடுநிலையாளர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், இது மிக பெரிய பொறுப்பு. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. 

இப்போது எனக்கு கூடுதல் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இதனை திறம்பட செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கும். இதே போல் ரசூல்பூக்குட்டியும், ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்தது என்னை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் குவிந்த திரளான ரசிகர்கள் ரசூல்பூக்குட்டியை நள்ளிரவு வரை வாழ்த்தி விட்டு சென்றனர்.ஜெய்ஹோ!
Friday, July 02, 2010 | 0 comments

இந்தி ராவன் தோல்வியா?

இந்தி ராவன் பட தோல்வியால் ஐஸ்வர்யா ராய் அதிர்ச்சியாகி உள்ளார். தமிழில் ராவணன் என்றும் தெலுங்கில் வில்லன் என்றும் இப்படம் வெளியானது. இவ்விரு மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தியில் மட்டும் எதிர்பார்த்தப்படி ஓடவில்லை. ராவன் படம் தனக்கு திருப்புமுனை படமாக அமையும் என்று ஐஸ்வர்யா ராய் கூறி இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதுவரை நடித்த படங்களிலேயே ராவனில் தான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிப்பை வெளிப்படுத்தினார். காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கி தன்னை வருத்திக்கொண்டார். 
திரையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பை எல்லோரும் பாராட்டினார். ஆனால் படம் ஜெயிக்கவில்லை. வீட்டுக்குள் முடங்கி வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். இந்தி ராவன் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எடிட்டிங் சரி இல்லை என்றும் கதை குழப்பமாக இருக்கிறது என்றும் அமிதாப்பச்சன் தெரிவித்த கருத்தும் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதை தன்னிடம் டெலிபோனில் கூறி இருக்கலாம். இணைய தளத்தில் வெளியிட்டது தவறு என்று மணிரத்னமே சொல்லி வருத்தப்பட்டார். அமிதாப்பச்சன் கருத்தினால் ரசிகர்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து போனது என்கின்றனர். 
ராவன் கதாபாத்திரத்தில் அபிஷேக்பச்சனை நடிக்க வைத்தது தவறு என்றும் விமர்சிக்கப்படுகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராயை கணவன், மனைவியாகவும் ஐஸ்வர்யாவை கடத்திப்போய் காட்டில் வைத்து சித்ரவதை செய்பவராக அபிஷேக்பச்சனையும் நடிக்க வைத்துள்ளனர். நிஜ வாழ்வில் கணவன், மனைவியானவர்களை திரையில் வேறு மாதிரி காட்டியது ரசிகர்களை ஈர்க்காமல் போய் விட்டது. இதுவே தோல்விக்கு காரணம் என்கின்றனர்.யானைக்கும் அடி சறுக்கும்ல.....

Friday, July 02, 2010 | 0 comments

ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் போட்டி

விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர். ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உ‌ரிமைக்கு.

இங்கிலாந்து, அமெ‌ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உ‌ரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, July 02, 2010 | 0 comments

Blog Archives