Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

காதலர்களை மகிழ்விக்க வரும் 'எங்கேயும் காதல்', 'கோ'!

Written By Raveendran on Saturday, February 5, 2011 | Saturday, February 05, 2011


காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது. தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு 'சிவா மனசுக்குள் சக்தி' படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று கே.வி.ஆனந்த்தின் 'கோ'. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'எங்கேயும் காதல்'. இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார். காதலர்களை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்ட படம் எதுவோ?

Saturday, February 05, 2011 | 0 comments

மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!


என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!பின்ன! விட்ட எடத்த பிடிக்க வேணாமா?
Saturday, February 05, 2011 | 0 comments

மூன்று வேடங்களில் ரஜினி!

Written By Raveendran on Wednesday, February 2, 2011 | Wednesday, February 02, 2011

சட்டையை மாற்றினால் ஆளே மாறிவிடுவார் என்று நினைப்பது போலதான் இருக்கிறது இது! ரஜினி நடித்த அனிமேஷன் படமான 'சுல்தான் தி வாரியர்' பின்பு 'ஹரா'வானது. இப்போது 'ராணா'வாகியிருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தால் ரஜினிக்கு இன்னொரு கூடுதல் கேரக்டர் கிடைத்திருக்கிறது என்பது மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் அதே! அதேதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் 'ராணா' படத்தை பற்றிதான்! பத்திரிகையாளர்களுக்கு அவசரம் அவசரமாக அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்கும் 'ராணா' என்ற விஷயம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. ஒரு புதுப்படம் போலவே இதை அறிவித்திருந்தார்கள். ரஜினி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய மந்திர வார்த்தைகள்தான் அவையெல்லாம் என்றாலும், நிஜம் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் தேடலும் அநேகமாக எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இருந்தது. 

http://msheri.com/wp-content/uploads/2011/01/hara-300x163.jpg
நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியானவை. 'சுல்தான் தி வாரியர்' படத்திற்கு சுமார் பத்து கோடி வரை பைனான்ஸ் செய்திருந்த ஆட்லேப்ஸ் நிறுவனம் தனது பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டதாம். மேலும் இரண்டு கோடிகள் வட்டியாக கொடுத்து பனிரெண்டு கோடியாக கடந்த வாரம்தான் செட்டில் செய்யப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் ஈராஸ் நிறுவனத்தோடு ஒரு புது ஒப்பந்தம் போட்டார்களாம்.
இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன் பகுதிகளை ஒரு ரஜினியாக வைத்துக் கொண்டு படத்தில் மேலும் இரண்டு நிஜ ரஜினிகளை உள்ளே நுழைத்துவிடலாம். அதற்கேற்றார் போல திரைக்கதையை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்தாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். இந்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ரஜினியே கூட விரும்பி ரவிக்குமார் ஆபிசுக்கு வந்திருக்கிறார். அவரும் டிஸ்கஷனில் கலந்து கொண்டிருக்கிறார். முள் மேல் விழுந்த சேலையாக பல கோடி ரூபாய்களை இந்த அனிமேஷன் படத்தில் கொட்டியிருந்தார் சவுந்தர்யா ரஜினி. இப்போது சேலையும் கிழியாமல் முள்ளும் உடையாமல் காப்பாற்ற போகிறார் கே.எஸ்.ரவிகுமார். அவர் போட்டிருக்கும் இந்த புதிய திட்டம் ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாகவே சர்க்கரை பொங்கலாக இருக்கும் என்பதுதான் அசர வைக்கும் உண்மை! அதுமட்டுமல்ல... இப்படத்தில் மற்ற இரண்டு ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிடமும், தீபிகா படுகோனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இத்துணூன்டு சீனிக்கே எறும்பு கூட்டம் மொய்க்கும்.. இதுல ஸ்வீட் ஸ்டாலே திறந்து கிடந்தா சொல்லவா வேணும்..!
Wednesday, February 02, 2011 | 0 comments

'3 இடியட்ஸி'ல் மீண்டும் விஜய்!

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், '3 இடியட்ஸ்.' இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு, 'மூவர்' என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் '3 இடியட்ஸ்' படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே '3 இடியட்ஸ்' படத்தின் கதை! யப்பா சாமிகளா... இப்ப மொதல்லயிருந்து ரீவைண்ட் பண்ணனுமா....?
Wednesday, February 02, 2011 | 0 comments