Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

செல்போனில் ராவணன் டவுன்லோட்!

Written By Raveendran on Friday, June 25, 2010 | Friday, June 25, 2010

மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் முழுப் படமும் செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. மேலும் யூ ட்யூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் முழுவதுமாக காண முடிகிறது. 

இப்போதெல்லாம் யாருடைய படமாக இருந்தாலும் சரி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இன்டர்நெட்டில் பார்த்து விட முடிகிறது. அந்த அளவுக்கு பைரஸி பேய் தலை விரித்தாடி வருகிறது. அந்த பேயின் தாக்குதலுக்கு தற்போது ராவணனும் சிக்கியுள்ளது. ராவணன் படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 சேலம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் செல்போனிலேயே முழுப் படமும் பார்க்கும்படி பரவ விட்டார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் படம் யூ ட்யூப் இணையத்தளத்தில் நல்ல தரத்தில் பார்க்கும் வகையில் செய்து விட்டனர் புண்ணியவான்கள். இதுதவிர 20க்கும் மேற்பட்ட அண்டர்கிரவுண்ட் இணையத்தளங்களிலும் முழுப் படமும் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த விவரங்களையும் டவுன்லோட் லிங்குகளையும் ஃபேஸ்புக்கிலும் பரவச் செய்கிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிக் பிக்சர்ஸ் நிறுவனம், வீடியோ பைரஸி பெரும் சவாலாக உள்ளது. மாற்று வழிகளும் தெரியவில்லை என்று கூறியுள்ளது.
இதனால் கோடிகள் செலவு செய்து படம் எடுத்து கோடியில் போய் கொட்ட ​வேண்டியதுதான். ஆனாலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து போலீஸில் எந்த புகார்களும் பதிவு செய்யப்படவில்லை. காலம் கெட்டு போச்சு, யாருக்கு என்ன கவலை....?

Friday, June 25, 2010 | 0 comments

ரஜினி மீண்டும் தாத்தா ஆனார் : தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை

Written By Raveendran on Tuesday, June 22, 2010 | Tuesday, June 22, 2010

நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷுக்கும்  காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் 2004 நவம்பரில் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு மூன்றரை வயதில் யாத்ரா என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யா அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 6.21 மணிக்கு, ஐஸ்வர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினி மீண்டும் தாத்தா ஆனதையொட்டி அவருக்கு சினிமா பிரமுகர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித்தனர். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, ஐஸ்வர்யாவை கவனித்து வரும் தனுஷ், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Tuesday, June 22, 2010 | 0 comments

கோரிப்பாளையம் திரைவிமர்சனம்!

Written By Raveendran on Saturday, June 19, 2010 | Saturday, June 19, 2010

சென்ட்டிமென்ட்டில் நனைத்தெடுத்த அருவா! அது சீறிப்பாய்வதுதான் கோரிப்பாளையம். 'இந்தாரூ....' என்று யாராவது மதுரை பாஷையில் பேச வந்தாலே மாருவலி வர்ற அளவுக்கு போயிட்டு இருக்கு தமிழ்சினிமா. ஆனாலும் துணிச்சலா மதுரையிலேயே மறுபடியும் 'ஆங்கிள்' வச்சுருக்காரு ராசுமதுரவன்.
சரக்கும், சைட் டிஷ்ஷ§மா திரியுற நாலு உருப்படாத பசங்க. அவங்க வாழ்க்கையில் நடக்கிற சொந்த பந்த சோகங்கள், மற்றும் அநாதை 
அழுகாச்சிகள், காதல், கட்டி உருளல் என்று சகல திசைகளிலும் பார்வையை செலுத்தியிருக்கிறார் இயக்குனர். முணுக்குன்னு சில காட்சிகளில் முட்டிகிட்டு வருது அழுகை. பல காட்சிகள் சொரேர். அடுக்கடுக்கா விழும் பிணங்கள், அதுக்கு கொள்ளி வைக்கிற வரை நீளும் காட்சிகள்னு பக்கத்து சீட் ஆசாமி நம்ம சட்டையில மூக்கு தொடைக்கிற அளவுக்கு போகுது சென்ட்டிமென்ட். ராசுமதுரவன் படத்தில் இது இல்லாமலா? போகட்டும்...

யாரோ ஒரு பொண்ணு நிக்கிற இடத்தில இந்த பசங்க எதார்த்தமாக நிற்க போக, பொண்ணுக்கும் பொறுக்கிகளுக்கும் லவ்வுன்னு போட்டுக் கொடுக்கிறார் ராஜ்கபூர். ஏன்? காரணம், இவருக்கும் பசங்களுக்கும் முன்பகை. இந்த நேரத்தில் களவாட போற பசங்க குறிப்பா அந்த பொண்ணு வீட்டுக்குள்ளேயே குதிக்க, கள்ளத்தொடர்புன்னு முடிவுக்கு வர்ற அண்ணனுங்க தங்கச்சியையும் கொன்னுட்டு பசங்களையும் விரட்டி விரட்டி வெட்டித்தள்ள, ஆரம்பிக்கிறது குருஷேத்திர போர். நடுவில தொழில் முறை ரவுடியான விக்ராந்தும் விரட்டுகிறார். கடைசி நாலு ரீலில் ஏ பாசிட்டிவ் ல் துவங்கி இசட் நெகட்டிவ் வரை ஆறாக ஓடுது ரத்தம்!
ஏகப்பட்ட பாத்திரங்கள். அதனால, மைண்ட்ல இருக்கிறவங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கலாம். பிறந்ததுமே அநாதை ஆகிவிடுகிற ராமகிருஷ்ணன், இரண்டொரு சந்திப்பிலேயே பூங்கொடி மேல் காதலில் விழுகிறார். இந்த ஜோடிகளின் அழுகாச்சியை விடுங்க. காதலில் சுவாரஸ்யம். ரோட்டோரத்தில் படுத்திருக்கும் இவர் மீது பூங்கொடியின் நாய் உச்சா போக, அங்க ஆரம்பிக்குது லவ். கடைசியில் வயிற்றுப்பிள்ளையுடன் ராமகிருஷ்ணன் சடலத்திற்கு கொள்ளி வைக்கிறாரு பூங்கொடி.
இன்னொரு ஜோடி ஷரிஷ்-சுவாசிகா. தனது மனைவி நண்பனோட காதலின்னு தெரிஞ்சதும், சுவாசிகாவின் தாலியை அறுத்து அதே நண்பனுக்கு மனைவியை தாரை வார்க்கிறாரு. தட்டிக் கேட்கும் ஊர் மக்களிடம், "அவ என் பெண்டாட்டி. இத கேட்க யாருக்கும் உரிமை இல்ல"ன்னு சொல்வது முறையல்ல என்றாலும், நல்ல டயலாக்!
இவர்களையெல்லாம் தாண்டி, நான் இருக்கேன் என்று பிரேமுக்கு பிரேம் மனசை அள்ளிகிட்டு போவது நம்ம சிங்கம்புலிதான். எம்ஜிஆர் விக், எக்குதப்பான டயலாக்னு மனிதர் குலுக்கியெடுக்கிறார். பேசாம டைரக்ஷன் வேலையை விட்டுட்டு முழுநேர காமெடி நடிகராயிட்டாருன்னா நாடே மெச்சும்! ஆப்பத்தை திருப்பி போட முடியாதுன்னு ஒரு டயலாக் விடுறாரு பாருங்க... தியேட்டரே அல்லுசில்லு ஆகுது. 'மயில்'சாமியின் ஆட்டத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு போனா அவர் தோளிலும் சென்ட்டிமென்ட்டை இறக்கி வைச்சு 'சோக'சாமியாக்கியிருக்காங்க. ப்ச்!
நடிச்சிருக்கிற இயக்குனர்கள் வரிசையில கொஞ்சம் மெச்சூரிடி நந்தா பெரியசாமியிடம். ரவிமரியாவோட செவத்த தோலையும் மீறி கருப்பா கலவரப்பட வைக்குது அவரோட வில்லத்தனம்.

குத்துப்பாட்டுக்கான கோரியோகிராப் எல்லாம் வில்லேஜ் மக்களுக்கான விசேஷ சர்பத்! என்ன இந்த மாற்றமோ... அருமையான மெலடி. சபேஷ் முரளிக்கு ஸ்பெஷல் பாராட்டு. அப்படியே பாலபரணியின் கேமிராவுக்கும் தனி ஜால்ரா போடலாம்.
இன்னொரு பீம்சிங்காவோ, கே.எஸ்.ஜியாகவோ வருவாருன்னு நினைச்சுட்டு இருந்தா, பேரரசு, ஏ.வெங்கடேஷ்களுக்கு போட்டியா குதிச்சிருக்காரு ராசு.மதுரவன். வேணாம்ங்க. உங்க பழைய ஸ்டைலுக்கு போங்க. இதுதாங்க எங்கள மாதிரி ரசிகருங்களோட கோரி(க்கை)பாளையம்!
Saturday, June 19, 2010 | 0 comments

5 கோடிக்கு ராவணனை வாங்கிய ராஜ் தொலைக்காட்சி

ராவணன் தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் தொலைக்காட்சி. சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே. இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் தொலைக்காட்சி. கலைஞர் தொலைக்காட்சியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி. இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்கு கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ் தொலைக்காட்சியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள். இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் தொலைக்காட்சி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் தொலைக்காட்சி வாங்கியதில்லை. இருவர், உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் தொலைக்காட்சிதான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. விருது கிடைக்கும் சரி, வசூல் ஆகுமா?

Saturday, June 19, 2010 | 0 comments

சினிமாவை விட்டு விலக மணிரத்னம் முடிவு!

சினிமாவை விட்டு விலகி கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட விரும்புவதாக இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் இன்று வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் ராவணன் வெளியாகிறது. இந்தி ராவண், தெலுங்கு வில்லன் படத்தையும் சேர்த்து 1300 திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு திருப்தியாக உள்ளதென பிக் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமைக்குப் பிறகு படம் தாக்குப் பிடிப்பது ரசிகர்கள் கையில் உள்ளது. 

இந்நிலையில் மணிரத்னம் அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு. இப்போது அடுத்த படம் என்ன என்ன? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன், என்று மணிரத்னம் தனது பேட்டியில் கூறியுள்ளார். வெற்றி படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் சினிமாவை விட்டு விலகக் கூடாது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தலைமுறை இயக்குனர்களுடன் போட்டி போட பாவம் சார்கிட்ட புதிய சரக்கு இல்லைபோல அதான் நைசா நழுவுறாரு!

Saturday, June 19, 2010 | 0 comments

இசைப் பயணத்தை கோலாகலமாக தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான்

Written By Raveendran on Sunday, June 13, 2010 | Sunday, June 13, 2010

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார்.
                                                                                                    உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது. அமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாசிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டொரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹுஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரகுமான். தனக்கு 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரகுமான். முதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரம்மாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரகுமான் தனது நிகழ்ச்சியை நடத்தினார். மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார். 
இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரகுமானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரகுமானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்கார் நாயகனே சும்மா அசத்துங்க....
Sunday, June 13, 2010 | 0 comments

கார்த்தியை காதலிக்கிறாரா தமன்னா?

நடிகை தமன்னா, பையா படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த கார்த்தியை காதலிப்பதாகவும், திடீரென்று சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு அவர் விளக்கம் அளிக்கும்போது, பையாவில் கார்த்தியுடன் நடித்ததை வைத்து, அவரை நான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரப்புகின்றனர்.




என்னை சந்திப்பவர்களெல்லாம் கார்த்தியை காதலிக்கிறீர்களாமே? என்று கேட்கிறார்கள். இதெல்லாம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. எங்களுக்குள் நல்ல நட்புதான் உள்ளது. வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பது நான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பது கிடையாது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தித்ததில்லை. என்னிடம் பலரும், தற்போது தமிழ்த் திரையுலகில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறீர்கள், என்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. 


ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் என் திறமையை வளர்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தவறில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார். சீக்கிரம் கத்துக்கிட்டு, நல்ல படமா தாங்க அம்மணி!

Sunday, June 13, 2010 | 0 comments

திருமணக் கோலத்தில் நயன் & பிரபுதேவா !

அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழகினார்கள். நயன்தாராவை திருமணம் செய்ய மனைவி ரம்லத்திடம் பிரபுதேவா அனுமதி கேட்டார். அவர் சம்மதிக்க வில்லை.பிரபுதேவாவுடனான தொடர்பை நயன்தாரா துண்டிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்றும் ரம்லத் பேட்டி அளித்தார். இதையடுத்து சில மாதங்களாக சென்னைக்கு வருவதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.

நயன்தாராவும் பிரபுதேவாவும் மணக்கோலத்தில் இருப்பது போன்று இண்டர்நெட்டில் படங்கள் பரவியுள்ளன. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக அவற்றில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் உண்மையா என்று இருவரிடமும் உறுதி படுத்த முயன்றபோது செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிஜமாகவே திருமண கோலத்தில் இப்படம் எடுக்கப்பட்டதா அல்லது போலியாக ''மார்பிங்'' செய்து வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை.நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் ''வில்லு'' படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது.




கேரளாவில் நடந்த மலையாள இயக்குனர் ஒருவரின் இல்லத் திருமணத்தில் கைகோர்த்த படி சென்று பங்கேற்றனர்.ஐதராபாத்தில் நடந்த பட விழாவில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியில் ஒன்றாக நடனம் ஆடினார்கள். இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய கேள்விகளுக்கு சொந்த விஷயம் என்று கூறி பதில் சொல்ல மறுக்கிறார்கள். இந்த நிலையில் தான் திருமண கோலத்திலான படத்தை இணைய தளங்கள் வெளியிட்டு உள்ளன.
Sunday, June 13, 2010 | 0 comments

ராவணன் – ஒரு உயிர் கொல்லும் பாடல் With ரஹ்மான் !!

Written By Raveendran on Wednesday, June 2, 2010 | Wednesday, June 02, 2010

நல்ல பாடல்களை கேட்கும்போது எனக்கு எப்போதும் ஒரு கிறுக்கத்தனமான சந்தேகம் வரும் அது பாட்டா..? மெட்டா…? சிறந்தது.. என்பதுதான் பல சமயங்களில் எத்தனை தடவை திரும்ப திரும்ப யோசித்தாலும் ம்ஹூம்…விடையே கிடைக்காது. இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் வந்து தொலைந்ததுதான் அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிய காரணமானது. அப்படி ஒரு வில்லங்கமான வினா இது. அண்மையில் ராவணன் பாடல்கள் வெளியான போது ‘உசிரே போகுதே’ பாடலை கேட்கும் போது மீண்டும் இந்த கேள்வி மூக்கை நுளைத்தது என் மண்டைக்குள் நடந்த சண்டையில் பாடல் பாடமாகிப்போனதுடன் ஒரு நல்ல பதிலும் கிடைத்தது.
ஒரு நல்ல பாடல் ஒரு நல்ல குடும்பம் போல தனியே பிரித்து பார்க்க முடியாது பிரிந்து போனால் சேர்ந்து இருக்கும் போது இருந்த சிறப்பு இல்லாமல் போய்விடும் மெட்டும் பாட்டும் அற்புதமாக பொருந்தி  மெட்டு பாட்டை அழகுபடுத்த.. மெட்டுக்கு பாட்டு அர்த்தத்தை கொடுக்க.. மொத்தத்தில் பாடல் முழுமையடைகிறது.
இதுதான் அந்த பதில் !!
ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல்

இந்த பதில் கூட  நீண்ட காலம் நிலைக்க முடியவில்லை மீண்டும் குழப்பம் !!அண்மையில் கலைஞ்ஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ராவணன் முதல் பார்வை நிகழ்ச்சியில் மெட்டும் பாட்டும் மேடை ஏறி இருந்தன ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல் ஒன்று முதலில் வைரமுத்து கவிதை வாசிக்கிறார்….
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேடகையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..
அர்த்தமுள்ள அழகிய வரிகள் வைரமுத்துவின் குரலில் கணீரென்று காதுகளில் ஒலித்து இனம்புரியாத ஒரு கிளர்ச்சி மனதில். வைரமுத்து எப்பொழுதும் மணிரத்தினத்திற்கு கொஞ்சமும் குறையாத முத்துக்களைதான் கொடுத்து வருகிறார்..
ரஹ்மான் ஒலிவாங்கியை கையில் எடுக்கிறார் நான்கு வரிதான் பாடுகிறார் அவரின் குரலில் வரிகளுக்குள் மெட்டு கலந்து   பாடல் உயிர் பெறுகிறது. கவிதைக்குள் அடைபட்டு கிடந்த உணர்வுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. மீண்டும் குழப்பம் இந்த முறை பதில் இப்படி வருகிறது !
கவிதை என்பது ஒரு அழகிய சிலை போல அதன் உணர்வுகளை வெளிக்கொணரும் உன்னதமான ஜீவன்தான் மெட்டு.
mani-ratnam-a-r-rahman-ravana-movie.jpg (400×271)இசைக்கே பெருமை சேர்க்கிறார் ரஹ்மான் !!


ராவணன் படத்தில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் உசிரே போகுதே. இப்பொழுது  இந்த புதிய பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாக மாறி விட்டது.முதலில் ஹிந்தியில் இந்த பாடலை கேட்கும் போதே அடிமையாகி விட்டிருந்தேன் இப்போது தமிழ் வரிகளுடன் பாடல் மனதை பிழிந்தெடுக்கிறது. என் தனிமையின் வெற்றிடத்தை இந்த பாடல் தான் இனி நிரப்பியபடி இருக்கும்.

குல்சார் + ரஹ்மான் பின்னணி இசையுடன் பாடல் ஹிந்தியில்

நாளுக்கு நாள் ராவணன் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டிருக்கின்றது சந்தோன் சிவனின் கைவண்ணத்தில் இதுவரை தொலைக்காட்சியில் நான் பார்த்த அத்தனை காட்சிகளும் பயங்கரமாக இருக்கின்றன .  இப்போது கூடுதலாக இந்த பாடல் அதுவும் படத்தின் முக்கியமான தருணத்தில் “படத்தின் உச்ச கட்ட பாட்டு இது.. இந்த மண்ணிடம் இருந்தும் ஒரு பெண்ணிடம் இருந்தும் ஒரு வீரன் விடைபெறும் போது வரும் பாடல்” என வைரமுத்து குறிப்பிடுகிறார்  திரையில் தான்பார்க்க முடியும். காத்திருப்போம் வரட்டும் ஜீன் 18 .
Wednesday, June 02, 2010 | 0 comments

ரஜினிக்கு செவாலியே சிவாஜி விருது!



விஜய் டிவி வழங்கிய செவாலியே சிவாஜி விருதினை, நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டுக்குப் போய் பெற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.




விஜய்டிவியின் முதலாண்டு விருதே ரஜினிக்குதான் வழங்கப்பட்டது. சிவாஜி படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருது அது. விழாவுக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே அவர் சொல்லிவிட்டார். இருந்தாலும் விஜய்டிவி தலைமை நிர்வாகி, ரஜினி இருக்கும் இடம் தேடிச் சென்று அந்த விருதினைக் கொடுத்தார்.
அன்று குசேலன் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியிலிருந்தார் ரஜினி!





அதன்பிறகு இரண்டு விருது விழாக்கள் நடந்தன. அவற்றிலும் ரஜினி பங்கேற்கவில்லை. இடையில் ஒருமுறை மட்டும் விஜய்டிவி விழாவில் பங்கேற்றார். அது கமல் - 50 விழா.


இந்த நிலையில் விஜய்டிவி 4-வது விருது விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைக்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.
விழாவில் அவருக்கு செவாலியே சிவாஜி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பிரபுவும் ராம்குமாரும் ரஜினியின் வீட்டுக்கே போய் கொடுப்பதாக முடிவு செய்து, அதனை ரஜினியிடம் தெரிவித்தனர்.
                  ஆனால் அதற்கு மறுத்து விட்ட ரஜினி, சிவாஜி பெயரில் அமைந்த விருதினை, அவரது இல்லத்தில் வைத்தே வாங்கிக் கொள்வதாகக் கூறினார். இதையடுத்து சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போய் விருதைப் பெற்றுக் கொண்டார் ரஜினி. சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும் பிரபுவும் இந்த விருதினை வழங்கினர். 
Wednesday, June 02, 2010 | 0 comments