விஜய்டிவியின் முதலாண்டு விருதே ரஜினிக்குதான் வழங்கப்பட்டது. சிவாஜி படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருது அது. விழாவுக்கு வர இயலாது என்பதை முன்கூட்டியே அவர் சொல்லிவிட்டார். இருந்தாலும் விஜய்டிவி தலைமை நிர்வாகி, ரஜினி இருக்கும் இடம் தேடிச் சென்று அந்த விருதினைக் கொடுத்தார்.
அன்று குசேலன் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியிலிருந்தார் ரஜினி!
அதன்பிறகு இரண்டு விருது விழாக்கள் நடந்தன. அவற்றிலும் ரஜினி பங்கேற்கவில்லை. இடையில் ஒருமுறை மட்டும் விஜய்டிவி விழாவில் பங்கேற்றார். அது கமல் - 50 விழா.
இந்த நிலையில் விஜய்டிவி 4-வது விருது விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு எப்படியாவது ரஜினியை வரவழைக்க பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் பங்கேற்க மறுத்துவிட்டார்.
விழாவில் அவருக்கு செவாலியே சிவாஜி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை பிரபுவும் ராம்குமாரும் ரஜினியின் வீட்டுக்கே போய் கொடுப்பதாக முடிவு செய்து, அதனை ரஜினியிடம் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு மறுத்து விட்ட ரஜினி, சிவாஜி பெயரில் அமைந்த விருதினை, அவரது இல்லத்தில் வைத்தே வாங்கிக் கொள்வதாகக் கூறினார். இதையடுத்து சிவாஜி கணேசனின் வீட்டுக்குப் போய் விருதைப் பெற்றுக் கொண்டார் ரஜினி. சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும் பிரபுவும் இந்த விருதினை வழங்கினர்.
0 comments:
Post a Comment