என்னை சந்திப்பவர்களெல்லாம் கார்த்தியை காதலிக்கிறீர்களாமே? என்று கேட்கிறார்கள். இதெல்லாம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. எங்களுக்குள் நல்ல நட்புதான் உள்ளது. வேறு எந்த உறவும் கிடையாது. எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பது நான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தெரியும். அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன். மற்றபடி எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பது கிடையாது. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று நான் யாரையும் நிர்பந்தித்ததில்லை. என்னிடம் பலரும், தற்போது தமிழ்த் திரையுலகில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறீர்கள், என்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் என் திறமையை வளர்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தவறில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார். சீக்கிரம் கத்துக்கிட்டு, நல்ல படமா தாங்க அம்மணி!
0 comments:
Post a Comment