Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

5 கோடிக்கு ராவணனை வாங்கிய ராஜ் தொலைக்காட்சி

Written By Raveendran on Saturday, June 19, 2010 | Saturday, June 19, 2010

ராவணன் தமிழ்ப் படத்தை ரிலையன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ 5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜ் தொலைக்காட்சி. சிவாஜி, தசாவதாரம் மற்றும் குசேலன் படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்ட தமிழ்ப் படம் இதுவே. இந்தப் படத்தை வாங்க தமிழ் சேனல்கள் சில போட்டியிட்டன. ஆனால் அதிக விலை கூறப்பட்டதால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறிவிட்டது சன் தொலைக்காட்சி. கலைஞர் தொலைக்காட்சியும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இதற்கிடையில் ரூ 5 கோடியைக் கொட்டிக் கொடுக்க முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி. இதைவிட நல்ல விலை இந்தப் படத்துக்கு கிடைக்காது என்ற நிலையில் கப்பென்று ராஜ் தொலைக்காட்சியை பிடித்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள். இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜ் தொலைக்காட்சி இந்தப் படத்தை வாங்கியிருப்பதை பெரும் ஆச்சர்யத்தோடு பேசுகின்றனர் திரையுலகில். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை சன் தொலைக்காட்சி வாங்கியதில்லை. இருவர், உயிரே, ஆயுத எழுத்து மற்றும் கடைசியாக வெளியான குரு போன்ற படங்களின் உரிமையை ஜெயா, விஜய் மற்றும் ராஜ் தொலைக்காட்சிதான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. விருது கிடைக்கும் சரி, வசூல் ஆகுமா?

0 comments:

Post a Comment