
சிம்பு தற்போது 'வானம்' படத்தில் நடித்து வருகிறார். அவரது காலில் ஆணி பட்டு பாதத்தில் வீக்கம் காணப்பட்டது. இதனால் சிரமப்பட்டார். டாக்டர்களிடம் சென்றபோது ஆபரேஷன் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கால் ஆணியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளார். ஓரிரு நாளில் இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. 'வானம்' படத்தை காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இதுபற்றி சிம்பு கூறும்போது, "கால் ஆணியால் காலில் வலி ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற முடிவு செய்துள்ளேன். கடந்த வருடம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மெகா ஹிட்டாக அமைந்தது. அது போல் 'வானம்' படத்தையும் எதிர்பார்க்கிறேன்" என்றார்.
ஒருவழியா வானத்துக்கும் சேர்த்து ஆணி அடிச்சிட்டீங்க...!
0 comments:
Post a Comment