
நடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த 'சிறுத்தை' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றினார். அவர்கள் முன் கார்த்தி பேசும் போது, 'சிறுத்தை' எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன் என்றார். பின்னர் ஏர்டெல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது:- சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் கூறினார்கள். நானும் உதவி இயக்குநராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால் தான் நிலைக்க முடியும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். என்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். காதலித்தால் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம். எனக்கு இப்போது பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் என்னுடைய அண்ணனை (சூர்யா) 'ரோல் மாடலாக' கொண்டுள்ளேன்.
நம்ம ராக்கெட்டு நல்லாத்தான் ஐஸ் வைக்கிறாருப்பா......!!!
0 comments:
Post a Comment