
வெற்றிமாறனின் 'ஆடுகளம்' பொங்கலுக்கு வெளிவருகிறது. 'பொல்லாதவன்' படத்தில் இணைந்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஆடுகளத்தில் தனுஷுடன் கிஷோரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். 'பொல்லாதவனைப்' போல இதிலும் கிஷோர் வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஊர் முழுக்க வதந்தி. ஆனால் இதனை வெற்றிமாறன் மறுத்துள்ளார். கிஷோர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அவரின் இன்னொரு பரிமாணத்தை இப்படம் காட்டும். நமது நிஜ வாழ்க்கையில் வில்லன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒருவர் நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் ரியாக்ட் செய்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றியதுதான் 'ஆடுகளம்' என வெற்றிமாறன் தெளிவுபடுத்தியுள்ளார்.
என்னத்தயாச்சும் புதுசா சொன்னாத்தானய்யா இவிங்க படமே பாப்பானுங்க...
0 comments:
Post a Comment