Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த சூர்யா!

Written By Raveendran on Friday, January 7, 2011 | Friday, January 07, 2011

சென்னையில் நடக்கும் ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் தோல்வியடைந்தார் நடிகர் சூர்யா. நடிகர்கள் இப்போது விளையாட்டுப் போட்டிகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஒருபக்கம் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. இன்னொரு பக்கம் டென்னிஸ், கால்பந்து, இறகுப் பந்து என வேறு விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்துகின்றனர். தற்போது சென்னை ஓபன் டென்னிஸ் ஆரம்பித்துள்ளது. இந்த டோர்னமெண்டில் பிரபலங்களுக்கான போட்டி நேற்று நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. நடிகர் சூர்யாவும் ரோஹன் போபன்னாவும் ஒரு அணியாகவும், நடிகர் விவேக் ஓபராய் - பாகிஸ்தானின் ஆசியம் குரைஷி இன்னொரு அணியாகவும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே விவேக் ஓபராயின் அணி சிறப்பாக விளையாடி, சூர்யா அணியைத் தோற்கடித்தது. இதுகுறித்து பின்னர் சூர்யா கூறுகையில், "விவேக்கும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். என்னை அண்ணா அண்ணா என்றுதான் விவேக் அழைப்பார். அப்படிப்பட்ட நண்பனுக்காக இந்த மேட்சில் நான் தோற்றேன்..." என்றாரே பார்க்கலாம். கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக் கூடாதுல்ல.....

0 comments:

Post a Comment