'மன்மதன் அம்பு' படத்தில் கமல், த்ரிஷா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' எனும் பாடல் வரிகள் எனது கட்சிக்காரரை வேதனைப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலை கமல் எழுதியுள்ளார். அவரும் த்ரிஷாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடல் வரிகள் இந்து சமயத்தினரையும் இந்துக் கடவுள்களை வழிபடுபவர்களையும் புண்படுத்துகிறது. பாடலில் வரும் 'அருள்மிகு அரங்கநாதன் மற்றும் 'ஸ்ரீவரலட்சுமி' பற்றிய கவிதை வரிகள் இந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி, பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? "குழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றம் இல்லாதவாயும் வேண்டும்" என கூறி கடவுள் அவதாரத்தை கேலி செய்துள்ளீர்கள். உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் முறை பற்றியும் ஸ்ரீவரலட்சுமி கடவுளாகிய உனக்காவது கல்வியைப் பெருமளவு போற்றும் கணவர் அமையப் பெற்றால் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் எனும் அர்த்தத்திலும் நீ அது போல் எனக்கு அமைய செய்யேன். ஸ்ரீவரலட்சுமி நமோஸ்துதே என ஒரு பெண் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்துர பாடல் என கடவுளை கேவலப்படுத்த முயன்றுள்ளீர்கள். 'கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்' என்ற பாடலை ஆடியோ சி.டி.யில் இருந்து நீக்க வேண்டும். ஒலி மற்றும் ஒளி என எந்த இடத்திலும் அதனை இடம்பெறச் செய்யக்கூடாது. மீறி இடம்பெறச் செய்தால் உங்கள் அனைவரின் மீதும் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தொட்டா குத்தம் விட்டா குத்தம்னா... எங்கயிருந்து வரும் சினிமா...? எல்லாரும் பழைய பேசும் படங்கள பார்க்க வேண்டியதுதான்!
0 comments:
Post a Comment