சென்னை மாவட்ட விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்றுவிட்டாராம். சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய் மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும். அரசுக்கு கெட்ட பேரு வர்ற மாதிரி எந்த தியேட்டர்காரர்களும் நடந்துக்க வேணாம். டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன. இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும். சென்னையைப் பொறுத்தவரை, இதுவரை டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள திரையரங்குகள் அரசு நிர்ணயித்துள்ள ரூ 100 மற்றும் 120 -ஐ மட்டுமே பெற்றுக் கொண்டு முன்பதிவு கூப்பனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி எல்லாப் படத்துக்கும் அரசு குரல் கொடுக்குமா?
அரசு நிர்ணயித்துள்ள எந்திரன் டிக்கெட் விலை
Written By Raveendran on Saturday, September 25, 2010 | Saturday, September 25, 2010
Labels:
A.R.ரஹ்மான்,
Kollywood செய்திகள்,
எந்திரன்,
ஐஸ்வர்யாராய்,
சூப்பர் Star ரஜினி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment