எப்போதுமே எனது மனம் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்று கூறியுள்ளார் த்ரிஷா. கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடை இடையே அவ்வப்போது பேட்டிகளையும் கொடுத்து விட்டு வருகிறார் த்ரிஷா. அப்படி அவர் லேட்டஸ்டாக கொடுத்த பேட்டியில் தனது மனம் கவர்ந்த நடிகர் எப்போதுமே கமல்ஹாசன்தான் என்று கூறியுள்ளார். இதுவரை தனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் கூறியதில்லை த்ரிஷா. குறிப்பாக இளம் நடிகர்களில் உங்களை யார் அதிகம் கவர்ந்தது என்ற கேள்விக்கு பதிலே கொடுக்க மாட்டார், எதற்கு வம்பு என்று. இந்த நிலையில் தனக்குப் பிடித்த ஒரே நடிகர் கமல் மட்டுமே என்று கூறியுள்ளார் த்ரிஷா. இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் அவர் எழுதியுள்ளதாவது... உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதுவரை பதில் சொல்லவில்லை. சிக்கல் வரும் என்பதால் அந்த கேள்வியைத் தவிர்த்தேன். ஆனாலும் விடவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இப்போது பதில் சொல்கிறேன். எப்போதும் எனக்குப் பிடித்தமான நடிகர் கமல். நான் அவரது தீவிர ரசிகை. பிடித்த நடிகையாக முன்பு சிம்ரன் இருந்தார். இப்போது தமன்னாவையும், சமந்தாவையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் த்ரிஷா. போட்டி நடிகைகளேயே பிடிக்கும்ம்னு சொல்லிட்டாரே....... ஆஹா.. அதிபுத்திசாலி!
த்ரிஷாவுக்கு பிடிச்சது யாரு?
Written By Raveendran on Wednesday, September 22, 2010 | Wednesday, September 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment