Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

மலையாளத்துக்கு சலுகையளிக்கும் விக்ரம்!

Written By Raveendran on Friday, August 6, 2010 | Friday, August 06, 2010

http://www.koodal.com/cinema/gallery/movies/bheema/bheema_31_10312007113056321.jpgரோஷன் ஆன்ட்ரூஸ் என்பவர் இயக்கும் மலையாளப் படத்தில் சம்பளம் கூட வாங்காமல் இலவசமாக நடித்துத் தருகிறாராம் சீயான் விக்ரம். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரோஷன், விக்ரமை அவரது புதிய வீட்டில் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதை ரோஷன் சொன்ன விதம் மற்றும் கதையின் அழுத்தம் போன்றவை விக்ரமுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இரண்டு மணிநேரம் நான் சொன்ன கதையைக் கேட்டு ஒரு கணம் சிலிர்த்து விட்டார் விக்ரம். கண்டிப்பாக இந்தப் படத்தை நான்தான் பண்ணுவேன். அடுத்த ஆண்டு ஆரம்பிக்கலாம் என உறுதி கூறினார், என்று விக்ரமுடனான தனது அனுபவத்தைக் கூறினார் ரோஷன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC_wFy1Eih7k7CeDZ2iKn0lRRYhK9bTGCu_ViSct8jPQGTOTU_R_DuZwDvjuEyQIbcmQaejqg-3ZWcLyvxv4tOC362iVwD_MxfRPS3tKYTMqDrBEkjocCRU6Klya_JJk6ln-P_n76-O3H_/s400/vikram.jpgசரி, மலையாளத்தில் நாலு கோடி, அஞ்சு கோடி சம்பளம் தரமாட்டார்களே, விக்ரம் எப்படி ஒப்புக் கொண்டார்? இப்படி நீங்கள் நினைப்பதே தவறு என்று சொல்லும் வகையில் ஒரு முடிவை அறிவித்து எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டார் விக்ரம். இந்தப் படத்துக்கு சம்பளமாக ஒரு பைசா கூட வேண்டாம். மலையாளப் பட உலகுக்கு என் பங்களிப்பாக இந்தப் படம் அமையட்டும் என்று கூறிவிட்டார். அவர் பெருந்தன்மை யாருக்கு வரும்! என கண் கலங்குகிறார் ரோஷன். விக்ரம் இப்போது இரு படங்களில் நடித்து வருகிறார். அவை முடிந்ததும் இந்த மலையாளப் படம் ஆரம்பமாகுமாம். அதற்குள் ரோஷனும் காஸனோவா என்ற தனது படத்தை முடித்துவிடுவாராம். வளர்த்து விட்ட தமிழுக்கு சிறப்புச் சலுகையெல்லாம் கிடையாதா சீயான்?

0 comments:

Post a Comment