Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

காதலர்களை மகிழ்விக்க வரும் 'எங்கேயும் காதல்', 'கோ'!

Written By Raveendran on Saturday, February 5, 2011 | Saturday, February 05, 2011


காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது. தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு 'சிவா மனசுக்குள் சக்தி' படமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று கே.வி.ஆனந்த்தின் 'கோ'. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'எங்கேயும் காதல்'. இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார். காதலர்களை கொள்ளை கொள்ளும் அதிர்ஷ்ட படம் எதுவோ?

Saturday, February 05, 2011 | 0 comments

மூன்றாவதாக இணையும் கார்த்தி-தமன்னா!


என்னதான் கார்த்தியும் நானும் நல்ல நண்பர்கள் என்று தமன்னா சொன்னாலும், 'சிறுத்தை' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணைவதால் இவர்கள் மீதான காதல் கிசு கிசுவுக்கு நிச்சயம் மேலும் அணல் மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது, இந்த சூப்பர் கெமிஸ்ட்ரி ஜோடியினர். இவர்கள் மீண்டும் ஜோடி சேர இருப்பது நேரடித் தமிழ் படத்தில் அல்ல. 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்க இருக்கும் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இருமொழிப் படத்தில் என்று தகவல் கசிகிறது. வழக்கம்போல இந்த படத்தையும் கார்த்தியின் நெருங்கிய உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். ஹரி விறுவிறுப்பாக இயக்கி வரும் 'வேங்கை' படத்தை தவிர வேறெந்த படமும் தற்போது தமன்னாவின் கைவசம் இல்லை. தற்போது தனது ஊதியத்தை தமிழில் 90 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக குறைத்திருக்கும் தமன்னா, தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் சிம்பு நடிக்க இருக்கும் படத்துக்கு தமன்னா கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் நம் காதுகளை எட்டியது!பின்ன! விட்ட எடத்த பிடிக்க வேணாமா?
Saturday, February 05, 2011 | 0 comments

மூன்று வேடங்களில் ரஜினி!

Written By Raveendran on Wednesday, February 2, 2011 | Wednesday, February 02, 2011

சட்டையை மாற்றினால் ஆளே மாறிவிடுவார் என்று நினைப்பது போலதான் இருக்கிறது இது! ரஜினி நடித்த அனிமேஷன் படமான 'சுல்தான் தி வாரியர்' பின்பு 'ஹரா'வானது. இப்போது 'ராணா'வாகியிருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தால் ரஜினிக்கு இன்னொரு கூடுதல் கேரக்டர் கிடைத்திருக்கிறது என்பது மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் அதே! அதேதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் 'ராணா' படத்தை பற்றிதான்! பத்திரிகையாளர்களுக்கு அவசரம் அவசரமாக அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்கும் 'ராணா' என்ற விஷயம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. ஒரு புதுப்படம் போலவே இதை அறிவித்திருந்தார்கள். ரஜினி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய மந்திர வார்த்தைகள்தான் அவையெல்லாம் என்றாலும், நிஜம் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் தேடலும் அநேகமாக எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இருந்தது. 

http://msheri.com/wp-content/uploads/2011/01/hara-300x163.jpg
நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியானவை. 'சுல்தான் தி வாரியர்' படத்திற்கு சுமார் பத்து கோடி வரை பைனான்ஸ் செய்திருந்த ஆட்லேப்ஸ் நிறுவனம் தனது பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டதாம். மேலும் இரண்டு கோடிகள் வட்டியாக கொடுத்து பனிரெண்டு கோடியாக கடந்த வாரம்தான் செட்டில் செய்யப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் ஈராஸ் நிறுவனத்தோடு ஒரு புது ஒப்பந்தம் போட்டார்களாம்.
இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன் பகுதிகளை ஒரு ரஜினியாக வைத்துக் கொண்டு படத்தில் மேலும் இரண்டு நிஜ ரஜினிகளை உள்ளே நுழைத்துவிடலாம். அதற்கேற்றார் போல திரைக்கதையை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்தாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். இந்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ரஜினியே கூட விரும்பி ரவிக்குமார் ஆபிசுக்கு வந்திருக்கிறார். அவரும் டிஸ்கஷனில் கலந்து கொண்டிருக்கிறார். முள் மேல் விழுந்த சேலையாக பல கோடி ரூபாய்களை இந்த அனிமேஷன் படத்தில் கொட்டியிருந்தார் சவுந்தர்யா ரஜினி. இப்போது சேலையும் கிழியாமல் முள்ளும் உடையாமல் காப்பாற்ற போகிறார் கே.எஸ்.ரவிகுமார். அவர் போட்டிருக்கும் இந்த புதிய திட்டம் ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாகவே சர்க்கரை பொங்கலாக இருக்கும் என்பதுதான் அசர வைக்கும் உண்மை! அதுமட்டுமல்ல... இப்படத்தில் மற்ற இரண்டு ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிடமும், தீபிகா படுகோனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இத்துணூன்டு சீனிக்கே எறும்பு கூட்டம் மொய்க்கும்.. இதுல ஸ்வீட் ஸ்டாலே திறந்து கிடந்தா சொல்லவா வேணும்..!
Wednesday, February 02, 2011 | 0 comments

'3 இடியட்ஸி'ல் மீண்டும் விஜய்!

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், '3 இடியட்ஸ்.' இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள். இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு, 'மூவர்' என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் '3 இடியட்ஸ்' படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே '3 இடியட்ஸ்' படத்தின் கதை! யப்பா சாமிகளா... இப்ப மொதல்லயிருந்து ரீவைண்ட் பண்ணனுமா....?
Wednesday, February 02, 2011 | 0 comments

சிம்பு காலில் ஆபரேஷனா?

Written By Raveendran on Wednesday, January 26, 2011 | Wednesday, January 26, 2011

சிம்பு தற்போது 'வானம்' படத்தில் நடித்து வருகிறார். அவரது  காலில் ஆணி பட்டு பாதத்தில் வீக்கம் காணப்பட்டது. இதனால் சிரமப்பட்டார். டாக்டர்களிடம் சென்றபோது ஆபரேஷன் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கால் ஆணியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளார். ஓரிரு நாளில் இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். எனவே படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. 'வானம்' படத்தை காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இதுபற்றி சிம்பு கூறும்போது, "கால் ஆணியால் காலில் வலி ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற முடிவு செய்துள்ளேன். கடந்த வருடம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மெகா ஹிட்டாக அமைந்தது. அது போல் 'வானம்' படத்தையும் எதிர்பார்க்கிறேன்" என்றார். ஒருவழியா வானத்துக்கும் சேர்த்து ஆணி அடிச்சிட்டீங்க...!
Wednesday, January 26, 2011 | 0 comments

அண்ணன்தான் எனக்கு ரோல் மாடல்! - கார்த்தி

http://way2online.com/wp-content/uploads/2010/08/Siruthai.jpgநடிகர் கார்த்தி நேற்று கோவை வந்தார். அவர் நடித்த 'சிறுத்தை' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றினார். அவர்கள் முன் கார்த்தி பேசும் போது, 'சிறுத்தை' எனக்கு 5-வது படம். நான் நடித்த அனைத்து படமும் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன் என்றார். பின்னர் ஏர்டெல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது:- சினிமாவிலும் வாரிசுகளே வருவதாக இங்குள்ளவர்கள் கூறினார்கள். நானும் உதவி இயக்குநராக பணியாற்றித்தான் நடிகராகி உள்ளேன். வாரிசு என்பதை விட கஷ்டப்பட்டு நடித்தால் தான் நிலைக்க முடியும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள். என்னுடைய திருமணத்தை பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். காதலித்தால் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம். எனக்கு இப்போது பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் என்னுடைய அண்ணனை (சூர்யா) 'ரோல் மாடலாக' கொண்டுள்ளேன். நம்ம ராக்கெட்டு நல்லாத்தான் ஐஸ் வைக்கிறாருப்பா......!!!
Wednesday, January 26, 2011 | 0 comments

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? - விஜய்!

http://nammaarea.com/wp-content/uploads/2010/09/Kaavalan-Movie-Stills-1.jpgஅரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். சென்னையில், 'வேலாயுதம்' படப்பிடிப்பில் இருந்த விஜய், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: பல பிரச்சினைகளுக்குப் பிறகு 'காவலன்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் எனது சில படங்கள் வெளியாகும்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது, அதை நான் சரி செய்திருக்கிறேன். ஆனால் 'காவலன்' படத்துக்குப் புதிதாக பல பிரச்சினைகள் உருவானது. அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்தேன். படத்துக்கு மக்கள் அளித்திருக்கும் வரவேற்பால் அந்த கவலை மறந்து சந்தோஷமாக இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? என்ற செய்தி அடிக்கடி மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் நடிகன் ஆனேன். ஆனால் இவ்வளவு பெரிய உயரத்தில் மக்கள் என்னை அமர வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை உயர்த்திப் பார்த்த மக்களுக்கு நானும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அரசியலுக்கு வரும் சூழ்நிலை இன்னும் வரவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இப்போது என் கவனம் சினிமாவில்தான் இருக்கிறது. இனி ஒரு ஆக்ஷன் படம், ஒரு கதையம்சமுள்ள படம் என்று மாறி மாறி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு பிரசாரம் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnS9HKDGHUdZE5vp_5XeD9E2W-C12PWAgAdBH3ghW7eQIyzD2dU-MNCevWRP_9LDxDtervzdjijOMr7Gqv6vb7_5XFGHaDcbBPPq58QRVBfjGaSkz6FDEkofs8P0FpQRDW0mSXe60DcKY/s1600/vijay_kavalan_movie_wallpapers_01.jpg
நான் அரசியலுக்கு வருவது பற்றியே முடிவு செய்யாதபோது, அந்த கேள்விக்கே இடம் இல்லை. எனது தந்தை ஜெயலலிதாவை சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனக்கு ராகுலை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்ததை போல ஜெயலலிதாவை சந்திக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல சந்திப்பு அவ்வளவுதான். ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அவருக்குத் தேவையானபடி நான் மாற வேண்டும். இப்போதைக்கு நான் வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அது இயலாத காரியம். அதனால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கும் வேறு காரணம் கற்பிப்பது தவறு. திருச்சியில் நடக்க உத்தேசித்திருக்கும் ரசிகர் மன்ற மாநாடு குறித்தும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றார். அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு சட்டம் ஒன்னும் இல்லையே......
Wednesday, January 26, 2011 | 0 comments

காவலுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார், யார்? விஜய் அதிரடி பேட்டி

Written By Raveendran on Sunday, January 23, 2011 | Sunday, January 23, 2011

இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.  காவலன் படம் எதிர்பார்த்தபடியே வெற்றிக்கனியை சுவைத்து விட்ட மகிழ்ச்சியுடன், அடுத்த படமான வேலாயுதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் இடையூறுகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCCpLnhJ0uKd84c8DE4UT5sYfKbVmuLoqO8oswnPBynYy1z0TwpN8FqNundQiBZQVFeOlB_UPUifCULvxZrg6nDs2JR-ff2sdPyz3TS16pu8En1bS-vLFdyIQNLg4qJw84jnadx3zSVHyL/s1600/Kavalan_New_Stills_04.jpg
காவலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பும் சில படங்களில் பிரச்னைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல. காவலன் படத்தில் சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம் தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. சில பல பிரச்னைகள் காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ம்தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும், அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன் படத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

இவ்வாறு விஜய் கூறினார். ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசியது குறித்தும், அரசியல் பிரவேசம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது. அரசியலில் நுழைவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காவலன் பிரச்னைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட நான் விரும்பவில்லை, என்றார்.
http://www.vijayfansclub.com/wp-content/uploads/2010/12/kavalan-movie-new-wallpapers-03.jpg
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். வருகிற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு,  பிரசாரம் செய்வது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை, என்றார்
Sunday, January 23, 2011 | 0 comments

சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!

Written By Raveendran on Friday, January 21, 2011 | Friday, January 21, 2011

நயன்தாரா பற்றிய ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார். 'வல்லவன்' படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சினை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா. பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்திற்குத் தெரியவர பெரும் பிரச்சினை வெடித்தது. இப்போதுதான் அந்தப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரம்லத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையைக் கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. 

விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சினை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சினை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு தமக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களைத் தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகிப் போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயைத் திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். வம்பு இனி வாயே தெறக்க மாட்டாருல்ல.....!
Friday, January 21, 2011 | 0 comments

காவலன் வெளியான ரகசியம்!


விஜய்யின் 'காவலன்' எப்படி ரிலீஸ் ஆனது என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் வியத்தகு கேள்வி. பிரபல பைனான்சியரான மதுரை அன்பு இந்த பஞ்சாயத்தில் பெரும் பங்கு வகித்தாராம். இவரும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதும் ஒரு காரணம். மதுரை ஏரியாவையும் இவர்தான் வாங்கிக் கொண்டார். இன்னொரு புறம் தோள் கொடுக்க வந்தவர் மைக்கேல் ராயப்பன். வருகிற தேர்தலில் தேமுதிக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கப் போகிறவர் இவர். திரையுலக வேலைகளை விட கட்சி வேலைகளைதான் அதிகம் பார்த்து வருகிறார் இப்போது. அந்த சூழ்நிலையிலும் ஓடோடி வந்த இவர், தேவைப்பட்ட பணத்தை கொடுத்து திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவை வாங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் எங்கும் வரக் கூடாது என்று முடிவெடுத்தார்கள் 'காவலன்' மீட்புக் குழுவினர். நான் பதினேழு கோடி கொடுத்திருக்கேன். என் பெயர் வந்தாகணும் என்று ஷக்தி சிதம்பரம் முரண்டு பிடிக்க, அப்போதுதான் களத்தில் இறங்கினாராம் மதுரை அன்பு. அவர் பிடித்த பிடியில் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டாராம் இவர். ஆனாலும் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்தாராம். எப்படியோ, 'காவலன்' வெளிவந்து விட்டது. ரசிகர்களுக்கு சந்தோஷமா என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும். அரசியல் தலைவிரித்து ஆடுதுல... அதான் சிக்கெடுக்க இம்புட்டு சிரமம்!
Friday, January 21, 2011 | 0 comments