
விஜய்யின் 'காவலன்' எப்படி ரிலீஸ் ஆனது என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் வியத்தகு கேள்வி. பிரபல பைனான்சியரான மதுரை அன்பு இந்த பஞ்சாயத்தில் பெரும் பங்கு வகித்தாராம். இவரும் விஜய்யும் நல்ல நண்பர்கள் என்பதும் ஒரு காரணம். மதுரை ஏரியாவையும் இவர்தான் வாங்கிக் கொண்டார். இன்னொரு புறம் தோள் கொடுக்க வந்தவர் மைக்கேல் ராயப்பன். வருகிற தேர்தலில் தேமுதிக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கப் போகிறவர் இவர். திரையுலக வேலைகளை விட கட்சி வேலைகளைதான் அதிகம் பார்த்து வருகிறார் இப்போது. அந்த சூழ்நிலையிலும் ஓடோடி வந்த இவர், தேவைப்பட்ட பணத்தை கொடுத்து திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவை வாங்கிக் கொண்டாராம். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் எங்கும் வரக் கூடாது என்று முடிவெடுத்தார்கள் 'காவலன்' மீட்புக் குழுவினர். நான் பதினேழு கோடி கொடுத்திருக்கேன். என் பெயர் வந்தாகணும் என்று ஷக்தி சிதம்பரம் முரண்டு பிடிக்க, அப்போதுதான் களத்தில் இறங்கினாராம் மதுரை அன்பு. அவர் பிடித்த பிடியில் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டாராம் இவர். ஆனாலும் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்தாராம். எப்படியோ, 'காவலன்' வெளிவந்து விட்டது. ரசிகர்களுக்கு சந்தோஷமா என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும். அரசியல் தலைவிரித்து ஆடுதுல... அதான் சிக்கெடுக்க இம்புட்டு சிரமம்!
0 comments:
Post a Comment