Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

சிம்புவிடம் முட்டிக்கொள்ளும் ரசிகை!

Written By Raveendran on Friday, November 19, 2010 | Friday, November 19, 2010

நான் சிம்புவின் ரசிகை. அவருக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டா அடுத்த நொடியே பிளைட் புடிச்சு ஸ்பாட்ல இருப்பேன், என்று பெரும் நம்பிக்கையோடு பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார் சினேகா உல்லல். தெலுங்கு தேசமே வியந்து நோக்கும் அழகியான இவரை இவ்வளவு சொன்ன பிறகும் விட்டு வைக்க சிம்பு என்ன காவி தரித்த சாமியாரா? 'வானம்' படத்தில் தனக்கு ஜோடியாக்கிக் கொண்டார். (அப்படின்னா அனுஷ்கா?) நடிக்க வந்த நாலே நாளில் 'சீச்சி பழம் புளிக்கும்' என்று கூறிவிட்டாராம் சிம்பு. அடிக்கடி ஸ்பாட்டில் முட்டிக் கொள்கிறார்களாம் இருவரும். சிம்பு அடிக்கிற ஜோக்குகளுக்குக் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்கிற அளவுக்கு உஷ்ணமாகியிருக்கிறார் சினேகா உல்லல். (பின்னணியில் என்ன பிணக்கோ) பொறுத்துப் பொறுத்து பார்த்த சிம்பு, "படத்துல இந்த பொண்ணு வேண்டாம். அவருக்குப் பதிலாக வேறொருவரை நடிக்க வைக்கலாம்" என்கிறாராம். ஐயய்யோ... ரீ ஷூட்டா? என்று அதிர்ந்து போன தயாரிப்பாளர் சிம்புவை கூல் பண்ணி வருகிறாராம். இன்னொரு பக்கம் சினேகாவையும்! இவரு தங்கம் இல்ல துருபிடிச்ச தகரம்னு இப்பதான் புரிஞ்சிச்சோ என்னவோ...?

0 comments:

Post a Comment