தமிழ்நாட்டின் முன்னணி கதாநாயகர்கள் ஏற ஆசைப்படும் குதிரை இது, அவர்களின் உயரம் குறைவு என்பதால் இந்த குதிரை ஏறும் பாக்கியம் யாருக்குமே கிடைக்கவில்லை, கிடைத்த ஒரு நாயகனும் திரைக்கு வெளியே இருந்து பார்க்கும் ரசிகன் போலவே அவரும் பார்த்ததுதான் மிச்சம். ஆனால் இப்போது அந்த குதிரைக்கு கடிவாளம் போட்டு சவாரி செய்ய இருக்கிறார் பாக்கியசாலி விக்ரம்.. அந்த குதிரை அனுஷ்கா! மதராசபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவங்கியது. அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது. உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும். தனது நோயின் காரணமாக சமூகசேவகி ஒருவரால் கொண்டு செல்லப்பட்ட தன் மகளை மீட்கப் போராடும் ஒரு வளர்ச்சி குன்றிய மனிதனின் கதையை இப்படம் பிரதிபலிக்கவுள்ளது. இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள். பூஜையினைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறவுள்ளது. எந்தவித உருவாக்குத்தன்மையும், கற்பனையும், முதன்மைத்தன்மையும் இன்றி, ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக கவரும் கலையினை மட்டும் கற்றுக்கொண்டு விஜய் மீண்டும் படத்தை இயக்கத் துவங்கிவிட்டார். இப்படம் கவனமாக உருவாக்கப்பட்டால் மட்டுமே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, அவர்களது உணர்வுகளில் ஊடுருவும் என்பதில் இயக்குநர் விஜய் தெளிவான கண்ணோட்டத்துடன் உள்ளார். வெளிநாட்டுக் கதை என்பதால் உள்ளூர் ரசிகர்களை கவரும் வகையில் அதனை மாற்றி அமைப்பது இயக்குநரின் கையில் தான் உள்ளது. கோழி நெட்டையோ சொத்தையோ... கொழம்பு ருசியா இருந்தா சர்தாம்பா......!
ஆரம்பமானது விக்ரம்-அனுஷ்காவின் முதல் சவாரி!
Written By Raveendran on Saturday, October 30, 2010 | Saturday, October 30, 2010
Labels:
Kollywood செய்திகள்,
அனுஷ்கா,
மதராசபட்டினம் புகழ் விஜய்,
விக்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment