Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

நம்பர் ஒன்னுக்கு பிறகுதான் திருமணம் - த்ரிஷா

Written By Raveendran on Friday, October 22, 2010 | Friday, October 22, 2010


திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி போன்ற பல ஹிட் படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது. அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது. ஆனால் த்ரிஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார். என் வயசெல்லாம் ஒரு வயசா.. நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் சிறந்த கதையம்சம் உள்ளவை. மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். திரையுலகில் எனக்கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாகவில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா? தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன். இந்திப் படத்தில் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். மீண்டும் இந்திப் படங்களில் நடிப்பேன், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரெடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பேன் என்றார். அடி... ஆத்தாடி! அப்போ கிழவியானாத்தான் கல்யாணமா?

0 comments:

Post a Comment