skip to main |
skip to sidebar
யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன் - சிம்பு
வானம்' படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நேற்று சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தனர். சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கிரிஷ், பட அதிபர் வி.டி.வி.கணேஷ் மற்றும் படக்குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றுப் பேசினர். அப்போது, சிம்பு படம் குறித்து கூறியதாவது:- 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளிவந்த பிறகு, 150 நாட்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல், சும்மா உட்கார்ந்திருந்தேன். 'கோ,' 'போடா போடி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் தள்ளிப்போய் விட்டன. அப்போதுதான் அல்லு அரவிந்த் நடித்த 'வேதம்' என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன். வித்தியாசமான படம். மிக அருமையான திரைக்கதை. பாதி படம் பார்த்தபோதே இந்தப் படத்தை தமிழில் நாம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். என் நண்பர் கணேஷ், இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். படத்தில் பரத், அனுஷ்கா, வேகா, சோனியா அகர்வால் என்று நட்சத்திரக் கூட்டம் நிறைய இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் ஈடுகட்டும். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வேறு ஒரு சிம்புவை பார்த்தது போல், 'வானம்' படத்தில் இன்னொரு சிம்புவை பார்க்கலாம்." என்றார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சிம்பு அளித்த பதில்களும் வருமாறு:- உங்களை விட, அனுஷ்கா உயரமானவர் என்று பேசப்படுகிறதே...? நான் வேண்டுமானால் பக்கத்தில் நிற்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். (இவ்வாறு கூறிவிட்டு, அனுஷ்கா பக்கத்தில் போய் நின்றார்.) சிம்பு உயரமாகத்தான் இருந்தார். நீங்கள் அனுஷ்காவின் ரசிகர் என்கிறீர்கள். மற்ற கதாநாயகிகளிடம் இல்லாத அம்சம் அனுஷ்காவிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? நான் அவ்வளவு எளிதில் யாருடைய ரசிகராகவும் மாற மாட்டேன். முன்பு ஜோதிகாவின் ரசிகராக இருந்தேன். 'அருந்ததீ' படம் பார்த்ததில் இருந்து அனுஷ்காவின் ரசிகராக மாறிவிட்டேன். பொதுவாக, ஒரு படத்தை கதாநாயகன்தான் தோளில் தூக்கி சுமப்பார். ஆனால், ஒரு முழு படத்தையும் கதாநாயகி அனுஷ்கா தோளில் தூக்கி சுமந்திருந்தார். அதனால்தான் நான் அனுஷ்காவின் ரசிகராக மாறினேன். உங்களுக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக சொன்னார்களே, மணமகளை தேர்ந்தெடுத்து விட்டார்களா? பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் தேர்வு செய்யவில்லை. ஒரு நடிகையை அழைத்துப்போய், 'இவளைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ஆசீர்வாதம் செய்' என்று உங்கள் அம்மாவிடம் சொன்னதாக ஒரு தகவல் பரவியதே? அப்படி யாரையும் நான் அழைத்துப்போகவில்லை. அது வெறும் வதந்தி. இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து நடித்த மாதிரி, தனுஷுடனும் இணைந்து நடிப்பீர்களா? தனுஷ் உட்பட யார் கூட வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பேன். வம்பு பண்ணாம யாரு கூட நடிச்சாலும் சரி!
0 comments:
Post a Comment