முன்பு இருந்த அழகை இழந்துவிட்டாலும், நயன்தாராவை இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டாரம். ஆனால் திரை கொள்ளாமல் சிரிக்கிற நயன்தாரா, நேரில் வேறு மாதிரி இருக்கிறார். அதை கண்ணுக்கு எதிரே பார்த்து கலங்கி போய் நிற்கிறார்கள் சில நிருபர்கள். நயன் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தினசரி நிருபர்கள் சிலரை அழைத்திருந்தார்கள் படப்பிடிப்பு தளத்திற்கு. இவர்களில் ஒருவரை பார்த்ததும் சாமியாடாத குறையாகிவிட்டார் நயன்தாரா. சில அடிகள் முன்னே வந்தவர், படக்கென்று காலில் விழுவது போல ஆக்ட் கொடுத்தார். எனக்கு பல முறை அபார்ஷன் பண்ணி வச்சவர் நீங்கதான். பல முறை கல்யாணம் பண்ணி வச்சவரும் நீங்கதான். உங்களை பார்க்கவே பிடிக்கலே என்று அவரது முகத்திற்கு நேரே கூற, அதிர்ச்சியில் உறைந்து போனார் நிருபர். வேறொரு பெண் நிருபரையும் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் நயன். நான் எப்போ சென்னைக்கு வந்தாலும் உங்க நியூஸ் பேப்பரை பார்க்கிறேன். அதில் என்னைப் பற்றி ஒரு கான்ட்ரவர்சி இருக்கு. இனிமே உங்களை சந்திக்கவோ பேட்டி கொடுக்கவோ மாட்டேன். நீங்களும் போகலாம் என்றார். ஆனால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும், கதாநாயகனும் மேற்படி நிருபர்களிடம் அன்போடு பழகக் கூடியவர்கள் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டார்கள் அவர்கள்.
பதிலுக்கு ஏதாவது பேசி நயன்தாரா கோபத்தை இன்னும் அதிகமாக்கினால் அவர் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார். படப்பிடிப்பு இன்னும் நீளும். தேவையில்லாமல் தயாரிப்பாளருக்குதான் செலவு ஏறும். எனவே பொறுத்திருப்போம் என்று பேசிக் கொண்டார்கள் அந்த நேரத்திலும். நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதுமின்றி படப்பிடிப்பு நிறைவுற்றது! மீடியாக்கள் மக்கள் மத்தியில் இருப்பதால் அப்படியும் இப்படியும் சிலதை விழுங்கித்தான் ஆக வேண்டும்.....!
0 comments:
Post a Comment