
பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக, நடிகராக, சண்டைக் காட்சிகளின் இயக்குநராகப் பணியாற்றிய பஞ்ச் பரத் இயக்கும் இரண்டாவது படம் 'நீதானா அவன்". இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை, பிலிம் சேம்பரில் நடைபெற்றது. வி.தஷி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜயகிருஷ்ணன், மக்கள்தாசன், முகில், பத்மாவதி ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். சாதாரணமாகச் சொல்லப்படுகிற வார்த்தையை வேறுவிதமாக எடுத்துக் கொண்டால் விளைவு விபரீதமாகி விடும். அப்படி அரசியல்வாதி ஒருவர் சாதாரணமாகக் கூறியதை விபரீதமாக எடுத்துக் கொள்கிற அடியாள் கூட்டம், ஒரு குடும்பத்தையே அழித்து விடுகிறது. அப்படி அழிந்த அந்த குடும்பத்தில் இருந்து, எதிரிகளை பழி தீர்க்க ஒருவன் வருகிறான். அவன் எப்படி எதிரிக்கூட்டதை தன் விவேகத்தால் அழிக்கிறான் என்பதை காமெடி, காதல், ஆக்ஷன் என்று கமர்ஷியல் முறையில் படமாக்கி இருக்கிறாராம் பஞ்ச் பரத். சதன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா, 'சன் டிவி' ஜெயஸ்ரீ ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சீதா, காதல் தண்டபாணி, வையாபுரி, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரங்கநாயகி தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment